For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3-வது அணி அமைக்க இளங்கோவன் தீவிரம்: த.மா.கா, கம்யூனிஸ்ட் ஆதரவு கோருகிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமாகா, கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து புதிய அணி அமைக்க முயற்சி செய்வேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.

இளங்கோவன் சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:

இடைத்தேர்தலை காங்கிரஸ் எப்படி சந்திப்பது என்பது குறித்து ஆலோசனை செய்வதற்காக கட்சியின் தலைவிசோனியாகாந்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் குழுவை டெல்லிக்கு அழைத்துள்ளார்.

அதனால் நான் டெல்லி செல்கிறேன். இடைத்தேர்தலில் தமிழகத்தில் பாஜக இல்லாத மதசார்பற்ற ஒரு புதியஅணியை உருவாக்க முயற்சி செய்வேன். தற்போது வலது கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லக்கண்ணு மற்றும்கம்யூனிஸ்ட் தலைவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள்.

அவர்களையும், தேவைப்பட்டால் தமாகா தலைவர் வாசனையும் சந்தித்து பேசுவேன். காங்கிரஸ், தமாகா,கம்யூனிஸ்டு கட்சிகள் சேர்ந்து ஒரே அணியாக செயல்பட முயற்சி மேற்கொள்வேன்.

எங்கள் கட்சியில் தங்கபாலு, யசோதா ஆகியோர் மட்டும் தான் அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்றுவெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மற்ற அனைவரும் புதிய அணியைத் தான் வரவேற்கிறார்கள்.

இந்த கருத்தை சோனியாவிடம் சொல்வேன். அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்என்று அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X