நாளை முதல் காஸ் லாரிகள் ஸ்டிரைக்
நாமக்கல்:
எல்.பி.ஜி. காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நாளை (திங்கள்கிழமை) முதல் நடைபெறுகிறது.
காஸ் லாரிகள் உரிமையாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தரப்படாமல் இருக்கும் நிலுவை வாடகைப் பணத்தைவழங்கக் கோரிதான் இந்த காலவரையற்ற ஸ்டிரைக் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே. சீனிவாசன் தெரிவித்தார்.
இந்த வாடகைத் தொகையைக் கேட்டு பலமுறை ஆயில் நிறுவன அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியும் பலனில்லை.நேரில் பேசியும் பலனில்லை என்று சீனிவாசன் கூறினார்.
இதனால் வரும் 7ம் தேதி (நாளை) முதல் அனைத்து எல்.பி.ஜி. லாரிகளின் இயக்கத்தையும் நிறுத்தி காலவரையற்றஸ்டிரைக்கில் ஈடுபடுவது என நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் சீனிவாசன்தெரிவித்தார்.
அதன்படி நாளை முதல் எல்.பி.ஜி. காஸ் டாங்கர் லாரிகள் இயங்காது.