For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லத்தீப் மரணம் பற்றி புகார் கூறிய 5 பேர் இந்திய தேசிய லீக்கிலிருந்து நீக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அப்துல் லத்தீப் மரணம் பற்றி புகார் கூறிய 5 பேர் இந்திய தேசிய லீக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

வாணியம்பாடித் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் லத்தீபை யாரோ விஷம் வைத்துதான் கொன்றுள்ளனர்என்றும் இதுப்பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் சிலர் நிருபர்களிடம்தெரிவித்திருந்தனர்.

இதுபற்றி இந்திய தேசிய லீக் கட்சியின் புதிய தலைவர் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தமிழக தலைவராக என்னை உட்பட 23 பேரை புதியநிர்வாகிகளாக சுலைமான்சேட் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நிர்வாகக்குழு கூட்டத்தில் எதையோ எதிர்பார்த்து வந்து அது கிடைக்காத சிலர் கட்சிக்குசம்பந்தமில்லாத சிலருடன் சேர்ந்து கூச்சலிட்டு சுலைமானை தரக்குறைவாக பேசினர்.

அவரைத் தரக்குறைவாக பேசிய திருச்சி ரஹிமுத்தீன், பரமக்குடி சீனி அலியார், சென்னை குலாம் உசேன்,ஜபார்சாதிக், அப்துல்ரஜாக் ஆகிய 5 பேரும் கட்சியின் மாநில நிர்வாகத்தில் இருந்தும், அடிப்படை உறுப்பினர்பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.

மேலும் திருச்சி அமினுத்தீன், கிருஷ்ணகிரி முகமது பாரூக், சென்னை லியாகத் அலி, நெல்லை நசீர் அகமது,புதுக்கோட்டை பென்ஸ்ஜாகீர் ஆகியோர் கட்சியின் நிர்வாகக்குழுவில் இணைக்கப்படுகின்றனர் என்று அவர்கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X