திருவண்ணாமலையில் கள்ளச் சாராயம் விற்ற 1,300 பேர் கைது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்றதாக 475 பெண்கள் உட்பட 1300 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் மாவட்ட போலீஸ் அதிகாரி பாலநாகதேவி உத்தரவின் பேரில்மாவட்டம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளும், மதுவிலக்கு போலீசாரும் சேர்ந்து கள்ளச் சாராய வேட்டையில்ஈடுபட்டனர்.
அப்போது கள்ளச் சாராயம் விற்றது, காய்ச்சியது தொடர்பாக 475 பெண்கள் உட்பட 1300 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 16 இரு சக்கர வாகனங்களும், 3 சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவர்களிடமிருந்து 1,610 லிட்டர் சாராயமும், 23,320 சாராய ஊறலும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சமாகும்.
அத்துடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5,000 மதுபாட்டில்களும்பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.50 லட்சமாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராய வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று போலீஸ் அதிகாரிதெரிவித்தார்.