ரஜினிக்கு எதிரான திருமண மண்டப வழக்கு தள்ளுபடி
சென்னை:
ராகவேந்திரா திருமண மண்டபம் தொடர்பாக ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ராகவேந்திராதிருமண மண்டபம் உள்ளது.
இந்த திருமண்டபம் அமைந்திருக்கும் நிலம் தனக்கு சொந்தமானது என்றும், நிலத்திற்கு உரிய பட்டா தனக்குவழங்க வேண்டும் என்றும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மனோகரன் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில்மனுத் தாக்கல் செய்திருந்தார்.
26.04.2000 அன்று இந்த மனுவை நீதிபதி சண்முகம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இருப்பினும் இந்த தீர்ப்பைஎதிர்த்து அவர் சென்னை 6வது சிட்டி சிவில் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் நேற்று (திங்கட்கிழமை) நீதிபதி மாணிக்கம், மேல் முறையீடு ஏற்புடையது அல்ல, எனவே இந்தவழக்கைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு வழங்கினார்.