போட்டியின்றி ராஜ்ய சபா எம்.பி. ஆனார் டாக்டர் மைத்ரேயன்
சென்னை:
ராஜ்யசபா எம்.பியாக அதிமுக வேட்பாளர் டாக்டர் மைத்ரேயன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமாகா தலைவர் மூப்பனார் மறைவையடுத்து, அவர் வகித்து வந்த எம்.பி.பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்த பதவிக்கு அதிமுக சார்பில் மைத்ரேயன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 117 எம்.எல்.ஏ.க்களின வோட்டுக்கள் தேவை.அதிமுகவுக்கு மட்டுமே 132 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
இதனால் வேறு யார் போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது. இந்நிலையில் வேட்பு மனுத் தாக்கல் கடந்ததிங்கட்கிழமை மாலை 3 மணியோடு முடிந்தது. ஆனால் மைத்ரேயனும், பத்மராஜன் என்பவரும் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது 10 எம்.எல்.ஏ.க்கள் முன் மொழிய வேண்டும். மேலும் ரூ.5,000 டெபாசிட்கட்ட வேண்டும். ஆனால் பத்மராஜனுக்கு யாரும் முன் மொழியவுமில்லை. அவர் டெபாசிட் பணமும்கட்டவில்லை.
எனவே நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடந்தபோது, பத்மராஜனின் வேட்புமனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
இதையடுத்து ராஜ்யசபா எம்.பியாக டாக்டர் மைத்ரேயன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.