சென்னையில் விடுதலைப்புலிகள் தங்க அனுமதி இல்லை: பன்னீர்
சென்னை:
விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கம் சென்னையில் தங்கி பேச்சுவார்த்தை நடத்தஅனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நார்வே குழுவினர் நடத்தும் சமாதானப் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த உதவுமாறு இந்திய அரசிடம்பாலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று கோட்டையில் நிருபர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. எனவே இந்தியாவில்பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
இதுவரை இதுகுறித்து மத்திய அரசு எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் விடுதலைப் புலிகள்தமிழகத்தில் தங்கி பேச்சுவார்த்தை நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்அனுப்பும் என்று பன்னீர் கூறினார்.