போலி வாக்காளர்கள்: விசாரணையைத் துவக்கினார் மத்திய தேர்தல் அதிகாரி
சென்னை:
ஆண்டிப்பட்டி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்தபுகாரையடுத்து, இன்று (வியாழக்கிழமை) சென்னை வந்த மத்திய தேர்தல் அதிகாரி கே.ஜே. ராவ் உடனடியாகவிசாரணையைத் தொடங்கியுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் முன் அத்தொகுதியில் உள்ள அரசியல்கட்சித் தலைவர்களை ராவ் இன்று காலை சந்தித்துப் பேசினார்.
அதிமுகவைச் சேர்ந்த சைதை. துரைசாமி, திமுக எம்.பியும் இதுபற்றி புகார் கொடுத்தவருமான குப்புசாமி உள்படபல அரசியல் கட்சித் தலைவர்கள் ராவிடம் வாக்காளர் பட்டியல் குறித்து விளக்கம் அளித்தனர்.
திமுக ஆட்சிக் காலத்திலேயே போலி வாக்காளர் அடையாள அட்டைகளெல்லாம் வந்து விட்டன என்று சைதைதுரைசாமி தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்.
இன்று சைதாப்பேட்டைத் தொகுதியில் விசாரணையை முடித்துக் கொள்ளும் ராவ், நாளை ஆண்டிப்பட்டிதொகுதிக்குச் சென்று போலி வாக்காளர்கள் குறித்து விசாரணை நடத்துவார்.
அதன் பிறகு வாணியம்பாடி தொகுதியிலும் அவர் வாக்காளர் பட்டியல்களைச் சரிபார்க்கவுள்ளார்.
அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு, வரும் 14 அல்லது 15ம் தேதி தலைமைத் தேர்தல் கமிஷனிடம்அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளார் ராவ்.