18ம் தேதி பதவி ஏற்கிறார் தமிழகத்தின் புதிய ஆளுநர்
சென்னை:
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ். ராமமோகன் ராவ், வரும் 18ம் தேதிபதவியேற்கவுள்ளார்.
ஓய்வு பெற்ற ஆந்திர மாநில டி.ஜி.பியான ராமமோகன் ராவ், தமிழகத்திற்கு தான் ஆளுநகராக நியமிக்கப்பட்டதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
சென்னையில் படித்த ராமமோகன் ராவ், ஏதோ சொந்த ஊருக்குத் திரும்ப நான் வருவது போலவே உணருகிறேன்என்றார்.
கடின உழைப்பு காரணமாகவே நான் முன்னுக்கு வந்தேன் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்துகொண்டு என்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்றுவேன் என்றும் அவர் நிருபர்களிடம் கூறினார்.
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அமைச்சகப் பணிக்கு அனுப்புமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.
"இது பற்றி நான் பத்திரிக்கைகளில் படித்துள்ளேன். வேறு எதுவும் தெரியாது" என்று கூறினார் ராமமோகன் ராவ்.
தமிழர்களுக்குத் தன்னுடைய பொங்கல் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் ராமமோகன் ராவ்.