தமிழகத்தில் புலிகள் பேச்சு நடத்த இளங்கோவன் எதிர்ப்பு
சென்னை:
தமிழகத்தில் வைத்து பேச்சு நடத்த விடுதலைப் புலிகளை அனுமதித்தால் கடுமையாக எதிர்ப்போம் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறிள்ளார்.
இளங்கோவன் நேற்று (புதன்கிழமை) தேனாம்பேட்டை கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:
இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி சோனியாகாந்தி விரைவில் அறிவிப்பார். காங்கிரஸ் தனித்து போட்டியிடவேண்டும் என்றே தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன்.
இடைத்தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணிக்குவாய்ப்புள்ளது. எங்களது கூட்டணியில் சேர வ.கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேசியுள்ளோம். இ.கம்யூனிஸ்ட்கட்சியுடனும் பேச உள்ளோம்.
இந்த கூட்டணியில் தமாகாவை சேர்க்க, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான சென்னிதாலாவாசனுடன் பேசியுள்ளார். நானும் விரைவில் வாசனை சந்தித்து பேசுவேன்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம். தடை செய்யப்பட்ட இயக்கத்தைசேர்ந்தவர்கள் இந்தியாவில் தங்கவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. அப்படிஅனுமதித்தால் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் என்று இளங்கோவன் கூறினார்.