For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளை ஜெ. ஆதரிக்கவில்லையா? - நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விடுதலைப் புலிகளை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விட வில்லை என்றுநிரூபிக்கப்பட்டால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

நார்வே குழுவினருடன் நடத்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக, தங்களுடைய செய்தித் தொடர்பாளர்பாலசிங்கத்தை குடும்பத்தினரோடு சென்னையில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் தங்க அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று (வியாழக்கிழமை)ஒரு கடிதம் அனுப்பி உள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம்.

அந்த கடிதத்தில் திமுக தமிழகத்தில் ஆட்சி செய்தபோது இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின்நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும், ஜெயலலிதா ஆட்சி செய்த 1991-96களிலும் இப்போதும்தான் புலிகள்ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி இனறு கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

1990ம் ஆண்டு ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கைஇந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து நாளிதழ்களில் வந்துள்ளது.

அப்படி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்று பன்னீர்செல்வம் நிரூபித்தால் நான் அரசியலை விட்டேவிலகத் தயாராக இருக்கிறேன்.

அறிக்கை வெளியிட்டுள்ளதை நான் நிரூபித்தால் பன்னீர், தற்காலிக முதல்வர் பதவியிலிருந்து மட்டுமல்லஎம்.எல்.ஏ. பதவியிலிருந்தும் விலகுவார என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X