For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சந்திக்க தயார் என்கிறார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி அப்பீல் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதித்ததாக தமிழக அரசு தொடர்ந்துள்ளவழக்கை சந்திக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிதெரிவித்துள்ளார்.

டான்சி மற்றும் கொடைக்கானல் ஹோட்டல் வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த மாதம்4ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கருணாநிதி விமர்சனம் செய்து பேட்டி கொடுத்துள்ளதாகவும், முரசொலியில் கட்டுரைஎழுதியுள்ளதாகவும், அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அட்வகேட்ஜெனரல் என்.ஆர். சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்குப் பற்றி கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு எந்த வழக்கை என் மீது தொடுத்தாலும் அதை நான் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறேன்.

முதல்வராக இருந்தவர் சட்டசபையில் முதல் நாள் நீதிமன்றத்தை அவமதித்து பேசிவிட்டு, மறு நாள் மறுத்துவிளக்கம் அளித்தது உண்டு.

அவர் யார் என்றும் உங்களுக்கே தெரியும் என்று கூறினார் கருணாநிதி.

"பத்திரிக்கைகளில் வரும் செய்திகளுக்கு, நிறுவனர் பொறுப்பாக மாட்டார், ஆசிரியர் தானே பொறுப்பாவர்" என்றுகேட்டதற்கு, "அதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் இப்பொழுது முரசொலி ஆசிரியர்நானில்லை" என்று கருணாநிதி பதிலளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X