அம்பலத்துக்கு வருகிறது சோனியா குடும்பப் பிரச்சனை
டெல்லி:
சோனியா காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக பிரியங்காவின் மாமனார் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவர்களுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றும் வேலை வாய்ப்பு மற்றும்சலுகைகள் பெற்றத் தருவார்கள் என்று எண்ணி யாரும் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும்பத்திரிக்கை மூலம் அறிவிப்பு வெளியிட்டார் ராபர்ட்.
இதேபோல் சோனியாவும் காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிஉள்ளார். அதில் ராபர்டின் குடும்பத்தார் ஏதாவது உதவி கேட்டால் செய்து கொடுக்கக் கூடாது என்று அவர்கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சோனியா குடும்பத்துக்கும் அவரது சம்பந்தி குடும்பத்துக்கும் இடையே மோதல்ஏற்பட்டிருக்கிறது. ராபர்ட் அவரது அப்பா வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ராஜிந்தர் வதேரா, சோனியா மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக மிரட்டல்விடுத்துள்ளார்.
எனது பெயரை தேவையில்லாமல் பயன்படுத்தி என்னை அசிங்கப் படுத்தியவர்களை நான் சும்மா விட மாட்டேன்.அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.
சோனியா, எனது மகன், மருமகள் யாராக இருந்தாலும் கவலைப்பட மாட்டேன். அவர்கள் மீது அவதூறு வழக்குதொடருவேன் என்று ராஜிந்தர் வதேரா கூறியுள்ளார்.