For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் பேச்சுவார்த்தையா? - இலங்கை விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இந்தியாவில் விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையை நடத்துவது என்பது தேவையில்லாத யோசனை என்றுஇலங்கை கூறுகிறது.

இந்தியாவில் புலிகள் பேச்சு வார்த்தை நடத்தவும், சென்னையில் பாலசிங்கம் குடும்பத்துடன் தங்க இந்தியாஅனுமதிக்க வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்ததாக பத்திரிக்கையில் செய்திகள்வெளியாகின.

விடுதலைப்புலிகள் இந்தியாவில் தங்கக் கூடாது என்று தமிழக அரசு, பல்வேறு கட்சிகள் மறுப்பு தெரிவித்திருந்தன.இந்நிலையில் இலங்கையின் கேபினட் செய்தி தொடர்பாளரும், அமைச்சருமான ஜி.எல். பெய்ரிஸ் நிருபர்களிடம்கூறியதாவது:

இந்த கருத்து தேவையில்லாதது. அமைதிப் பேச்சுவார்த்தை இன்னும் அந்த கட்டத்திற்கு வரவில்லை. இப்போதுபேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தில் தான் இருக்கிறது.

செய்தியாளர்கள் சொல்வதற்கு எல்லாம் இந்திய அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள்எதிர்பார்க்கவில்லை.

இலங்கை அரசு இப்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அடிப்படைத் தேவையான சூழ்நிலையை உருவாக்கும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

போர் நிறுத்தத்தை நீடிக்க விரும்புகிறோம். இடையிலேயே போர் நிறுத்தத்தைக் கைவிட இலங்கை அரசுக்குவிருப்பமில்லை என்று பெய்ரிஸ் கூறினார்.

இந்நிலையில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் விக்கிரமநாயகே மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து கருத்து கேட்டுக் கொண்டுள்ளார் நார்வே தூதுக்குழுவின்சிறப்பு தூதுவர் எரிக் சோலிம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X