சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலை வெளியிடத் தடை
சென்னை:
மறு அறிவிப்பு வரும் வரை சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலை வெளியிடக் கூடாது என்று மத்திய தேர்தல்அதிகாரி கே.ஜே. ராவ் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்நடைபெற உள்ளது. அதனால் புதிய வாக்காளர்கள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.
இந்த புதிய வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக திமுக தரப்பில் புகார் வந்ததைஅடுத்து, 3 தொகுதிகளிலும் ராவ் விசாரித்து வருகிறார்.
மற்ற இரண்டு தொகுதிகளிலும் விசாரித்து முடித்து விட்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) வாணியம்பாடிதொகுதியில் விசாரணை நடத்தி வருகிறார். இன்று வாணியம்பாடியில் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:
சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலை மறு அறிவிப்பு வரும் வரை வெளியிடக் கூடாது என்று அத்தொகுதிதேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன்.
மாவட்ட அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசித்து தேர்தலுக்கு தேவையான பாதுகாப்புநடவடிக்கைப் பற்றி ஆலோசிக்குமாறு கூறியுள்ளேன்.
தேர்தல் நடக்கும் இடங்களில் கட்சிக்காரர்கள் 3 வாகனங்களுக்கு மேல் சாலையில் நடமாடாமல் இருக்குமாறுகண்காணிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளேன்.
3 தொகுதிகளிலும் விசாரணை மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தலைமைத் தேர்தல் கமிஷனரிடம் வரும்திங்கள்கிழமை (ஜன.14) சமர்ப்பிப்பேன் என்று ராவ் கூறினார்.