போலி வாக்காளர்கள் எதிரொலி: சைதாப்பேட்டை, வாணியம்பாடி இடைத் தேர்தல் ஒத்திவைப்பு
டெல்லி:
தேர்தல் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறிசைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் நடைபெறவிருந்த இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகமத்திய தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.
ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகளிலும் ஏராளமான போலிவாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் தேர்தல் கமிஷனிடம் திமுக புகார் தெரிவித்திருந்தது.
இதையடுத்து கடந்த வார இறுதியில் இந்த 3 தொகுதிகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினார் மத்தியதேர்தல் அதிகாரி கே.ஜே. ராவ்.
பின்னர் நேற்று தலைமை தேர்தல் கமிஷனிடம் தன்னுடைய அறிக்கையை ராவ் சமர்ப்பித்தார்.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 2 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சமீபத்தில்தயாரிக்கப்பட்டபோது தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தன என்று தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இந்த 2 தொகுதிகளிலும் நடக்கவிருந்த இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கமிஷன் அறிவித்துள்ளது.
ஆனால் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடப் போவதாகக்கருதப்படும் ஆண்டிப்பட்டி தொகுதி மட்டும் தப்பி விட்டது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி பிப்ரவரி 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும்என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.