For Daily Alerts
Just In
தமிழகத்தில் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்
சென்னை:
இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குதமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அமைச்சர் செம்மலை, சரோஜா, வளர்மதி, பொன்னையன், தம்பிதுரை மற்றும் பல அமைச்சர்கள், அதிமுகபிரதிநிதிகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இன்று மாலை காஞ்சிபுரத்தில் திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழா தமிழக அரசு சார்பில் நடக்க உள்ளது.இந்த விழாவில் முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் 30 நூலாசிரியர்களுக்கு, சிறந்த நூல்களுக்கான திருவள்ளுவர் விருதை முதல்வர் வழங்க உள்ளார்.
Comments
Story first published: Tuesday, January 15, 2002, 5:30 [IST]