தேர்தல் அதிகாரி ஆண்டிப்பட்டியில் முழு விசாரணை நடத்தவில்லை: திமுக புகார்
டெல்லி:
போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரி, ஆண்டிப்பட்டியில்மட்டும் முழுமையாக விசாரிக்கவில்லை என்று தலைமைத் தேர்தல் கமிஷனிடம் திமுக இன்று (புதன்கிழமை) புகார்கூறியுள்ளது.
குப்புசாமி தலைமையிலான 4 திமுக எம்.பிக்கள் இன்று தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியைச்சந்தித்து இவ்வாறு தெரிவித்தனர்.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்ற திமுகஎம்.பிக்கள், ஆண்டிப்பட்டி தொகுதி வாக்காளர் பட்டியலில்தான் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளனஎன்று கூறினர்.
எனவே ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலையும் ஒத்திவைக்கும்படி கிருஷ்ணமூர்த்தியிடம் திமுக எம்.பிக்கள்கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே ஆண்டிப்பட்டி தொகுதியிலும் இடைத் தேர்தலைஒத்திவைக்கும்படிக் கேட்டுக் கொண்டுள்ளன. எனவே மற்ற இரு தொகுதிகளுக்கும் செய்தது போலவே இந்தத்தொகுதி தேர்தலையும் ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கூறினர்.
தங்கள் கோரிக்கையை தேர்தல் கமிஷனர் பரிசீலனை செய்வார் என்று நம்புவதாக குப்புசாமி பின்னர் நிருபர்களிடம்கூறினார்.