For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் "காணும் பொங்கல்" கொண்டாட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று (புதன்கிழமை) காணும் பொங்கல்கொண்டாடப்படுகிறது.

3 நாள் பொங்கல் விழாவின் கடைசி அம்சமான காணும் பொங்கலின்போது உற்றார், உறவினரை குடும்பத்தோடுசென்று கண்டு நலம் விசாரிப்பது தமிழர்களின் வழக்கமாகும். இந்தப் பொங்கலைத்தான் காணும் பொங்கல் என்றுகூறுவர்.

பொது இடங்களான கடற்கரை, தியேட்டர்கள், கோவில்கள், காட்சியகங்கள் போன்ற இடங்களில் இன்றையதினத்தின்போது பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று உற்றார் உறவினர்களைத் தேடிக் கண்டுபிடித்துசந்தோஷம் கொள்வர்.

சென்னையைப் பொருத்தவரை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, சிறுவர்பூங்கா, விஜிபி தங்கக் கடற்கரை மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு குடும்பத்தோடு சென்று காணும்பொங்கலை உற்சாகத்தோடு மக்கள் கொண்டாடுவர்.

நேற்று மாலை மெரீனா கடற்கரையில் உல்லாச படகுச் சவாரி சென்ற 3 பெண்கள் பலியான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடலில் படகு சவாரி செய்ய பொதுமக்களுக்கு போலீஸார் தடைவிதித்துள்ளனர். மேலும் கடற்கரை முழுவதும் போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாமல்லபுரத்திலும் படகுச் சவாரிக்கு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வண்டிகளும் அவசரசேவைக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X