3வது அணிக்கு யார் தலைமை? - தமாகா, காங்கிரஸ் மோதல்
சென்னை:
தமாகா தலைமையில் 3வது அணியமைக்க அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தீவிரமாக முயன்று வருகிறார்.இதனால் காங்கிரஸுக்கும், தமாகாவுக்கும் மோதல் வெடித்துள்ளது.
தமிழகத்தில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற 3வது அணியை அமைப்பதில் தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் தான் முதலில் இருந்து முயற்சி எடுத்து வருகிறார்.
சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமாகாவும் தன்னுடைய தலைமையில் 3வது அணி அமைக்கமுயன்று வருகிறது. இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் தமாகா தலைவர்வாசன் பேசி வருகிறார்.
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமாகா தலைவர்கள்மற்றும் வாசனுடன் அவருடைய இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் ஒன்றே கால் மணி நேரம் நடந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரசார்கலந்துக் கொள்ள வில்லை.
இதனால் 3வது அணியை யார் தலைமையில் அமைப்பது என்ற மோதல், காங்கிரஸுக்கும், தமாகாவுக்கும்இடையே பகிரங்கமாக வெடித்துள்ளது.