கோபாலுக்கு முன் ஜாமீன் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி:
தமிழக, கர்நாடக போலீசார் தன்னைச் சித்திரவதை செய்வார்கள் என்று அஞ்சுவதால், தனக்கு முன் ஜாமீன் அளிக்கவேண்டும் என்று கோரி "நக்கீரன்" ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்ற வழக்கு தொடர்பாக சமீபத்தில் "நக்கீரன்"நிருபரான சிவசுப்பிரமணியத்தை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
இவர் கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே கோபாலைத் தேடி கர்நாடகப் போலீசார் சென்னைக்கு வந்ததாகவும்கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழக, கர்நாடகப் போலீசார் தன்னைக் கைது செய்து சித்திரவதை செய்வார்கள் என்று அஞ்சியகோபால், தனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி டி.பி. மோஹபாத்ரா மற்றும் நீதிபதி பி.வி.ரெட்டி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன் நடைபெற்றது.
இவ்வழக்கு தொடர்பாக கோபால் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என்றுகூறிய நீதிபதிகள், ஆனால் முன் ஜாமீன் கோரி தமிழக அல்லது கர்நாடக உயர் நீதிமன்றங்களில் அவர் மனு தாக்கல்செய்யலாம் என்று கூறினர்.