டான்சி வழக்கு: ஜெ. விடுதலையை எதிர்க்கும் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி:
ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டுமனுக்கள் மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
டான்சி வழக்கில் ஜெயலலிதா உட்பட அனைவரையும் விடுதலை செய்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம்தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் டான்சி நிலம் அரசு நிலமே அல்ல என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உட்படமொத்தம் 5 மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
டான்சி நிலம் அரசு நிலமே அல்ல என்று உயர் நீதிமன்றம் தவறாகத் தீர்ப்பளித்துள்ளது, ஆனால் டான்சி நிலம்அரசுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று தன் மனுவில் பாரதி கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகளுடன் ஜெயலலிதா சதித் திட்டம் தீட்டி, டான்சி நிலத்தை வாங்கியதன் மூலம் அரசுக்கு ரூ.3.5 கோடிநஷ்டம் ஏற்படுத்தியுள்ளார் என்று என்று சுப்பிரமணியம் சுவாமி தன் மனுவில் கூறியுள்ளார்.
இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், மறுபடியும் தமிழகத்துக்கு ஆபத்து வரலாம். அதனால் அவரைஇந்த வழக்கு முடியும் வரை எந்த அரசுப் பொறுப்பையும் வகிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்சுவாமியின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களின் மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்ற பெஞ்ச் நீதிபதிகள் கே.டி.தாமஸ்மற்றும் துரைசாமி ராஜூ ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அவர்கள் இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.