பிப். 1ல் பாஜகவில் இணைகிறது எம்.ஜி.ஆர். அதிமுக
சென்னை:
எம்.ஜி.ஆர். அதிமுக பிப்ரவரி 1ம் தேதி பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் பாரதீய ஜனதாக் கட்சியில் முறைப்படிசேரவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில்:
எம்.ஜி.ஆர். அதிமுக கட்சி வரும் பிப்ரவரி 1ம் தேதி முறைப்படி பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைகிறது. எங்கள்கட்சியில் அனைத்துப் பிரிவினரையும் ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர் முன்னிலையில்எங்கள் கட்சி பாரதீய ஜனதாவில் இணைகிறது.
அதன் பிறகு தமிழகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக நீடித்ததற்கும், ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வர முடிந்ததற்கும்நான்தான் காரணம். ஆனால் அதை ஜெயலலிதா மறந்துவிட்டார்.
நாங்கள் பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்த பிறகு, அதிமுகவுடன் பாரதீய ஜனதாக் கட்சி கூட்டணி வைக்க முடிவுசெய்தால், பா.ஜ.க. மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
மத்திய அமைச்சர் பதவி கேட்டு நான் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை. அது பிரதமரின் உரிமை. இந்த விஷயத்தில்பிரதமரின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று திருநாவுக்கரசு கூறினார்.