டாக்டர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களை நியமிப்பதில் இடஒதுக்கீட்டு முறையை தமிழக அரசுகடைபிடிக்கவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதைக் கண்டித்து பெரும் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஆரம்ப சுகாதார நிறுவனங்களுக்கு டாக்டரை நியமிப்பதில் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட கவுன்சிலிங்முறையை தமிழக அரசு இப்போது தூக்கி எறிந்துவிட்டது.
எந்த முறையும் இல்லாமல் வேண்டியோர் வேண்டாதோர் என பார்த்து மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவருகின்றனர். இதில் இட ஒதுக்கீட்டையும் அரசு கண்டு கொள்ளவில்லை.
முறைப்படி தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்ஆகியோருக்கு இந்த மருத்துவர்கள் தேர்விலும் இட ஒதுக்கீட்டின்படி வாய்ப்பு வழங்க வேண்டும்.
இதைச் செய்ய அரசு மருத்தால் மாநில அளவில் பெரும் போராட்டம் வெடிக்கும். அதை நானே முன் நின்றுநடத்துவேன் என ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.