For Daily Alerts
Just In
கருவைக் கலைக்க மறுத்த மகளைக் கொன்றார் தாய்
கோவை:
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி விட்ட மகளை, கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி தாய் வற்புறுத்தினார். அதை ஏற்க மறுத்த மகளைஅரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
கோயம்பத்தூர் அருகே உள்ளது மாடத்தி குப்பம். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு 18 வயதுப் பெண் தவறான உறவு மூலம் கர்ப்பமடைந்தார்.இதனால் அதிர்ச்சியுற்ற அந்தப் பெண்ணின் தாயார், கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். ஆனால் மகள் மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தாயார், தனது மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்துவந்து அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Story first published: Saturday, January 19, 2002, 5:30 [IST]