For Daily Alerts
Just In
13 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து: தமிழகத்தில் மிக விரிவான ஏற்பாடுகள்
சென்னை:
தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக நாளை 13 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்கப்படவுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 40,000 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போலியோவை ஒழிப்பதற்காக இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான குழந்தகைளுக்கு நாளை போலியோசொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. 5 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் மத்திய, மாநிலஅரசுகள் சொட்டு மருந்து வழங்கவுள்ளன.
தமிழகத்தில் இதற்காக மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள் தவிர, பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்களில் கூட இதற்கான முகாம்கள்அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நடந்த முதல் கட்ட முகாமில் தமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துவழங்கப்பட்டது.
Story first published: Saturday, January 19, 2002, 5:30 [IST]