இடைத் தேர்தலைப் புறக்கணிக்க விடுதலைச் சிறுத்தைகளும் முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு முடிவுசெய்துள்ளது.
சென்னையில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தின் முடிவில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் அவ்வமைப்பின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் கமிஷடன் போன்ற சுய அதிகாரம் பெற்ற அமைப்புகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.
எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் எங்களுடைய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு போட்டியிடாது.
மேலும் பாப்பாப்பட்டி, கீரிப் பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டகாச்சியேந்தல் ஆகிய தனித் தொகுதிகளில்மறு வாக்குப்பதிவு நடத்த நடவடிக்கை எடுக்காத தமிழக தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக அரசை விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது என்று அவ்வறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.