For Daily Alerts
Just In
தேர்தலைப் புறக்கணிக்க அனைத்துக் கட்சிகளுக்கு இளங்கோவன் அழைப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. ஜனநாயக விரோத செயல்களும் அதிகாரதுஷ்பிரயோகங்களும் நடந்தபடி உள்ளன.
இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை.
அதனால் தான் காங்கிரஸ் மேலிடம் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தலை புறக்கணிப்பதாகதமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன்.
திமுக, மதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க முன் வர வேண்டும், ஏனெனில் தேர்தல் கமிஷன்நடந்து கொள்ளும் முறை அதிருப்தி அளிக்கிறது என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
Comments
Story first published: Monday, January 21, 2002, 5:30 [IST]