திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் கமிஷன்
டெல்லி:
தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை நீக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை ஏற்க தேர்தல் கமிஷன்மறுத்து விட்டது.
வாக்காளர் பட்டியல் தயாரித்ததில் ஆண்டிப்பட்டி தொகுதியிலும் முறைகேடு நடந்துள்ளது. ஆனால்இத்தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது என்று திமுக தேர்தல்கமிஷனிடம் புகார் செய்தது.
ஆனால் திமுகவின் புகாரை தேர்தல் கமிஷன் கண்டு கொள்ளவேயில்லை. இதனால் எரிச்சலடைந்த திமுக, தங்கள்புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக நீக்க வேண்டும்என்று தலைமைத் தேர்தல் கமிஷனருக்குக் கடிதம் எழுதியது.
திமுகவின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. தனிப்பட்ட முறையில் திமுக கூறியுள்ள புகாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இன்று வெளியிடப்பட்ட தேர்தல் கமிஷனின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷனின் மூவர் குழு முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்தலாம்என்று முடிவெடுக்கப்பட்டது என்றும் தேர்தல் கமிஷன் விளக்கமளித்துள்ளது.