முற்றுகிறது திமுக - தேர்தல் கமிஷன் மோதல்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற திமுகவின் புகார் ரசனை குறைவானதல்ல என்றுஅக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.
தனிப்பட்ட முறையில் கூறப்பட்டுள்ள திமுகவின் இந்தப் புகார் ரசனைக் குறைவானது என்றும் அக்கட்சியின்கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்திருந்தது.
இதற்குப் பதிலளித்த கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் வாக்காளர் பட்டியல் குளறுபடி நடந்துள்ளது பற்றி இந்தியாவிலேயே அதிகமாக வெளியாகும்"ஹிந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிக்கையே கூறியுள்ளது.
அப்பத்திரிக்கை கூறியது ரசனை குறைவு இல்லை என்றால், நாங்கள் கூறியதும் ரசனை குறைந்ததல்ல.
தேர்தல் கமிஷன் எங்கள் புகாரை நியாயமாகக் கருதவில்லை. அவர்களுடைய பதில்தான் ரசனைக் குறைவாகஉள்ளது.
ஆண்டிப்பட்டியில் நடந்துள்ள ஏராளமான முறைகேடுகளை பிரச்சாரத்தின்போது மக்களிடம்தெரியப்படுத்துவோம். மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்றார் கருணாநிதி.
திமுகவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று தமாகா, மார்க்சிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு,எங்கள் கோரிக்கையை நிராகரிப்பதற்கு அக்கட்சிகளுக்கு உரிமையுண்டு என்று கருணாநிதி பதிலளித்தார்.