நாளை பறக்கிறது இன்சாட்-3சி
பெங்களூர்:
இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான இன்சாட்-3சி நாளை (வியாழக்கிழமை) விண்ணில்செலுத்தப்படவுள்ளது.
செயற்கைக் கோளை ஏவுவதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டதாக பெங்களூரில் உள்ள இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
சுமார் 2,750 கிலோ எடையுள்ள இன்சாட்-3சி கடந்த டிசம்பர் 4ம் தேதியே கொருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
பெங்களூரிலிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள ஹாசன் மாஸ்டர் கன்ட்ரோல் மையம், இன்சாட்-3சி செயற்கைக்கோளை தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டிலும் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.
ஏற்கனவே விண்ணில் சுற்றிவரும் இன்சாட்-2சியின் ஆயுள் விரைவில் முடியவிருப்பதால், தற்போது இன்சாட்-3சிஏவப்படவுள்ளது. தொலைத் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு இன்சாட்-3சி உதவும்.
இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான "ஆப்பிள்" (1981) முதல் தற்போதைய "இன்சாட்-3சி" வரை மொத்தம் 8செயற்கைக் கோள்கள் ஏரியன் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது அனுப்பப்படவுள்ள இன்சாட்-3சி செயற்கைக் கோள் முழுக்க முழுக்க இஸ்ரோவிலேயேதயாரிக்கப்பட்டது.
சுமார் ரூ.250 கோடியில் இன்சாட்-3சி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயற்கைக் கோளை ஏவுவதற்குமட்டும் ரூ.350 கோடி செலவாகும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
அடுத்த 12 ஆண்டுகளுக்கு இன்சாட்-3சி செயல்படும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பு:
இன்சாட்-3சி செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படுவதை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புசெய்கிறது.
இந்த நேரடி ஒளிபரப்பு நாளை காலை 3.45 மணிக்கே துவங்குகிறது.