For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இன்சாட்-3சி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

இந்திய விண்வெளித் துறையின் அடுத்த மைல் கல்லாக, இன்று (வியாழக்கிழமை) இன்சாட்-3சி செயற்கைக் கோள்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு விண்வெளித் தளத்திலிருந்து ஐரோப்பாவின் ஏரியன்-4 ராக்கெட் மூலம் இன்றுஅதிகாலை 4.23 மணிக்கு இன்சாட்-3சி ஏவப்படவிருந்தது.

ஆனால் சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிளம்புவதற்கு 11 வினாடிகளுக்கு முன், செயற்கைக் கோளைச்செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

கோளாறு சரிசெய்யப்பட்டு 54 நிமிடத் தாமதத்திற்குப் பின்னர், இன்சாட்-3சி செயற்கைக் கோளை ஏரியன்-4ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

கிளம்பிய 21 நிமிடங்களுக்குப் பின்னர் இன்சாட்-3சி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

அடுத்த அரை மணி நேரத்திலேயே இந்த தொலைத் தொடர்பு செயற்கைக் கோளின் முழுக் கட்டுப்பாட்டையும்கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் கட்டுப்பாட்டு நிலையம் தனக்குக் கீழ் கொண்டு வந்தது.

இன்சாட்-3சி வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஹசன் கட்டப்பாட்டு நிலைய விஞ்ஞானிகளும்பெங்களூரில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளும் தெரிவித்தனர்.

செயற்கைக் கோளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. கஸ்தூரி ரங்கன்மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்தியாவின் தொலைபேசித் தொடர்பு, மொபைல் தொலைபேசித் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகஇன்சாட்-3சி பயன்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து:

இன்சாட்-3சி செயற்கைக் கோள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதற்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், துணைஜனாதிபதி கிருஷ்ணகாந்த் மற்றும் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X