சென்னை ஐ.ஐ.டியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய ஊழியர் கைது
இடம்- சென்னை ஐ.ஐ.டி.
பெயர்- மகாதேவன்
கொடுக்கப்பட்ட வேலை- ஐ.ஐ.டியில் தாறகாலிக ஊழியர்
செய்த வேலை- ஐ.ஐ.டியில் டூ- வீலர்களை அபேஸ் செய்வது
சென்னை ஐ.ஐ.டியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல மோட்டார் சைக்கிள்கள் தொலைந்து போயின.
ஐ.ஐ.டி. முழுவதும் காவலர்களை நியமித்தும் கூட இந்தத் திருட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.
மாணவர்களின் பைக்குகள் மட்டுமின்றி, பேராசிரியர்களின் வண்டிகளும் திருடுபோய் வந்தன.
இதில் ஸ்கூட்டி போன்ற பெண்களின் வாகனங்களும் தப்பவில்லை. தொடர்ந்து ஐ.ஐ.டியில் இருந்து வந்த இந்தபுகார்களால் வெறுத்துப் போன போலீசார் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் திணறினர்.
இறுதியில் நிச்சயம் உள்ளுக்குள் இருக்கும் யாரோ தான் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக்கண்டுபிடித்த போலீசார் அவரை கையும் களவுமாய் பிடிக்க செயலில் இறங்கினர்.
தோட்டக்காரர்கள் போலவும், எலெக்ட்ரீசியன்கள் போலவும் மாறு வேடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்போலீசார்.
அப்போது சில நாட்களுக்கு முன் மகாதேவன் ஒரு வண்டியை ரொம்ப நேரமாய் பல சாவிகள் போட்டு ஸ்டார்ட்செய்ய முயற்சிக் கொண்டிருந்தார். அவரிடம் என்ன சார் பிரச்சனை? என்று விசாரித்த மாறுவேட போலீசிடமேகொஞ்சம் ஸ்டார்ட் பண்ணி கொடுங்க என்று கேட்க அதிர்ச்சியடைந்த அந்த போலீஸ்காரர் மகாதேவனை கையும்களவுமாகப் பிடித்தார்.
அவரிடம் இருந்து ஐ.ஐ.டி. ஊழியர்களுக்குச் சொந்தமான 6 மோட்டார் சைக்களிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் பல வண்டிக்களை விற்றுவிட்டார் மகா. அந்த வண்டிகளைக் கண்டுபிடித்துக் கைப்பற்றும் பணி நடந்துவருகிறது.