தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல்
ஜொகன்னஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 குடும்பங்களை, ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல்கண்மூடித்தனமாகத் தாக்கி அவர்களை அந்த இடங்களில் இருந்து காலி செய்ய வைத்தது.
இவர்களை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று ஒரு வாரத்திற்கு முன் வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறிதாக்கியுள்ளது. அந்தக் கும்பல் அந்த வீட்டில் கொள்ளை அடித்ததும் இல்லாமல், தீயிட்டும் கொளுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டது.
பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாகச் செயல்பட்டு காயமடைந்த கோவேந்தையும் மோங்கோரியையும்காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதேபோல் டர்பன் நகரில் உள்ள சில்வர்லென் என்ற இடத்தில் வசித்து வந்த 3 பேர் கொண்ட குடும்பத்தையும் ஒருகும்பல் தாக்கியுள்ளது.
அவர்கள் வலுக்கட்டாயமாக இருப்பிடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறிய அந்தக் கும்பல், பின்னர் அந்தவீட்டையும் கொளுத்திவிட்டு ஓடிவிட்டது.
இந்தச் சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.