For Daily Alerts
Just In
5.2 கி.மீ. நீள காகிதத்தில் எழுதி மதுரை மாணவிகள் சாதனை
மதுரை:
குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை லேடி டோக் கல்லூரி மாணவிகள் 5. 2கி.மீ. காகிதத்தில் எழுதி சாதனைபுரிந்துள்ளனர்.
இம்மாணவிகள் குடியரசு தின விழாவில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
இதன்படி 5.2 கி.மீ. நீளமுள்ள ஒரே காகிதத்தில் தொடர்ச்சியாக எழுதி கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்தனர்.அக்கல்லூரியின் மைதானத்தில் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2,200 மாணவிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் இணைந்து மும்முரமாக எழுதத் தொடங்கினர். இந்த காகிதத்தில்கல்லூரியின் வரலாறு, கதைகள், கட்டுரைகள், கார்ட்டூன், படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகளையும் கல்லூரி நிர்வாகம்மேற்கொண்டுள்ளது.
Comments
Story first published: Monday, January 28, 2002, 5:30 [IST]