For Daily Alerts
Just In
பெரியகுளத்தில் பிள்ளையார் கோவில் கட்ட முயற்சித்த இந்து முன்னணி
பெரியகுளம்:
நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பிள்ளையார் கோவில் கட்ட முயன்ற இந்து முன்னணித் தொண்டர்களைபோலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பெரியகுளம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பிள்ளையார் கோவில் கட்ட இந்து முன்னணி முயன்றது. இந்துமுன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் இதற்குத் தலைமை வகித்தார்.
அவர் தலைமையில் வந்த இந்து முன்னணி தொண்டர்கள், கொடிக் கம்பத்தை நாட்டினார்கள். பின்னர் கோவில்கட்டுவதற்கான பணிகளில் இறங்கினர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் ராம. கோபாலனுடன் போலீஸார்பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு, கோவில் கட்டும் முயற்சியை கைவிடுவதாக ராம.கோபாலன் அறிவித்தார்.
Comments
Story first published: Monday, January 28, 2002, 5:30 [IST]