For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

திருவையாறு:

திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகபிரம்ம சபை இதற்கு ஏற்பாடு செய்துள்ள 155-வது தியாகராஜர் ஆராதனை விழாநேற்று (திங்கள்கிழமை) மாலை திருவையாற்றில் தொடங்கியது.

கேரள மாநில நிதியமைச்சர் சங்கரநாராயணன் ஆராதனை விழாவைத் தொடங்கி வைத்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், சபையின் அறங்காவலருமான ஜி.கே.வாசன், சபாவின் தலைவர் ஜி.ஆர்.மூப்பனார், செயலாளர்கள் குன்னக்குடி வைத்தியநாதன், ஆகியோர் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

ஜி.கே. வாசனின் தந்தையும் தமாகாவை உருவாக்கியவருமான ஜி.கே. மூப்பனார்தான் சத்குரு ஸ்ரீதியாகபிரம்மசபையின் முந்தைய தலைவராக இருந்தார்.

ஒவ்வொரு ஆராதனை விழாவின்போதும் மூப்பனார்தான் முன்னின்று நடத்தி வைப்பார். மூப்பனார் இல்லாமல்இந்த ஆராதனை விழா நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வரும் பிப்ரவரி 2ம் தேதி பிரபல இசைக் கலைஞர்களான கே.ஜே. ஜேசுதாஸ், ஹரிஹரன் உள்பட பல்வேறு கர்நாடகஇசைக் கலைஞர்கள் பங்குபெறும் பஞ்சரத்ன கீர்த்தனைதான் ஆராதனை விழாவின் ஹைலைட் நிகழ்ச்சியாகும்.

முன்னதாக பிப்ரவரி 1 ம் தேதி ஏககால லட்சார்ச்சணை நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து 2ம் தேதி சிறப்புஅர்ச்சனைகள் நடைபெறும்.

அனைத்து கலைஞர்களும் ஒருங்கிணைந்து பாடும் பஞ்சரத்ன கீர்த்தனைதான் ஆராதனை விழாவின் ஹைலைட்நிகழ்ச்சியாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X