பிப்.15 வரை மேட்டூரில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர்:
மேட்டூர் அணையிலிருந்து வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்துகாவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கமாக ஜனவரி மாத இறுதியிலேயே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்திவைக்கப்படும்.
ஆனால் தற்போது இன்னும் சாகுபடி முடியாததால் இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்து மேட்டூரிலிருந்துதண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, பிப்ரவரி 15ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீரைத்திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள காவிரி பாசன விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் மேலும் சில நாட்களுக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் விவசாயிகள் விருப்பம்தெரிவித்தனர்.