ஓமன் கடலில் மூழ்கிய கப்பல்: 14 இந்தியர்கள் மீட்பு
துபாய்:
ஓமன் கடற்பகுதியில் மூழ்கிய கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 இந்தியர்களை பிரிட்டிஷ் ஹெலிகாப்டர்கள்மீட்டன.
ஓமனுக்கு அருகில் உள்ள ரஸ் அல் ஹத் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று இன்ஜின் உள்ளபகுதியில் கடல் தண்ணீர் புகுந்ததால் அந்தக் கப்பல் கவிழ்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த வேறு ஒரு கப்பலில் உள்ளவர்கள் மஸ்கட் ரேடியோ நிலையத்திற்கும், மூழ்கிய கப்பலின்உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அப்பக்கம் வந்த பிரிட்டிஷ் ஹெலிகாப்டர்கள், அந்தக் கப்பலில் தவித்துக் கொண்டிருந்த 14இந்தியர்களையும் காப்பாற்றின. பின்னர் அவர்கள் ஓமன் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களின் உடல்நலம் நல்ல முறையில் உள்ளதாக ஓமன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த மூழ்கிய கப்பலை மீட்கும் பணியில் ஓமன் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.