பிப்.1ம் தேதி பாஜகவில் இணைகிறார் திருநாவுக்கரசு
சென்னை:
வரும் 1ம் தேதி எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளரான எஸ். திருநாவுக்கரசு தன் கட்சி உறுப்பினர்களுடன்பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) சேரவுள்ளார்.
எம்.ஜி.ஆர். அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்தது.
அப்போது பாஜகவுடம் எம்.ஜி.ஆர். அதிமுகவை இணைப்பது என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த இணைப்பிற்குச் சம்மதம் தெரிவித்தனர்.
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்முன்னிலையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி டெல்லியில் அக்கட்சியுடன் இணையவுள்ளதாக திருநாவுக்கரசுநிருபர்களிடம் கூறினார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர். அதிமுக தொண்டர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாகவும் அவர்கள் அனைவரும் இன்று இரவு டெல்லி கிளம்புவதாகவும் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
உத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்குப் பின் திருச்சி அல்லது மதுரையில் இந்த இணைப்பு விழா நிகழ்ச்சிபிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் திருநாவுக்கரசு கூறினார்.
ஆனால் கர்நாடகாவில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர். அதிமுகவின் கிளை பாஜகவுடன் திருநாவுக்கரசு இணைவதைவிரும்பவில்லை.
வாழப்பாடி ராமமூர்த்தி கடந்த வாரம்தான் தன்னுடைய தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு,காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்தக்கது.