நக்கீரன் நிருபருக்கு நிபந்தனை ஜாமீன்
மைசூர்:
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இன்று (புதன்கிழமை) கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் வழங்கியதாகக் கூறி கடந்த நவம்பர் மாதம் சிவசுப்பிரமணியத்தைகர்நாடகப் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் கோயம்புத்தூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டார். வெள்ளித் திருப்பூரில் போலீஸ் நிலையம் தாக்கப்பட்டது உள்பட பல வழக்குகள் அவர் மீதுதொடரப்பட்டுள்ளன.
இதற்கிடையே சிவசுப்பிரமணியம் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி, சிவசுப்பிரமணியத்தை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யஉத்தரவிட்டார்.
மைசூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவசுப்பிரமணியம் தினமும் ஆஜராகி, கையெழுத்துப் போடவேண்டும்என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.