For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதிகளை ஒடுக்குகிறாராம் முஷாரப்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடுமையான நடவடிக்கைகளைஎடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பாராட்டியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியபோது புஷ் இவ்வாறு கூறினார்.

தீவிரவாத அமைப்புகளைக் களைந்தெறிவதில் முஷாரப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு நல்ல ஆர்வம் காட்டிவருவதாகவும் புஷ் கூறியுள்ளார்.

தன்னுடைய உரையின்போது முஷாரப்பை அடிக்கடி பாராட்டிப் பேசிக் கொண்டே இருந்தார் புஷ்.

இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு மேலும் சிறிது காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் புஷ் வற்புறுத்தினார்.

இந்தியாவை தாக்கியது ஜெய்ஷ் அமைப்பு:

இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற தீவிரவாதஅமைப்பினர்தான் என்று புஷ் கூறினார்.

ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹமாஸ், ஹெஸ்பொல்லா, இஸ்லாமிக் ஜிகாத் போன்ற தீவிரவாத அமைப்புகள் இன்னும்காடுகளிலும் பாலைவனங்களிலும் ஒளிந்து கொண்டு உலகம் பூராவும் தீவிரவாத நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளன என்றார் புஷ்.

ஆனால் சில நாடுகள் இத்தகைய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அவ்வாறு அவர்கள்நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்களே அந்த நடவடிக்கையை எடுத்து விடுவோம் என்றும் புஷ்எச்சரிக்கை விடுத்தார்.

ஆப்கானிஸ்தானில் எங்கள் ராணுவத்தினர் தீவிரவாதத்தை முழுமையாக ஒழித்துவிட்டனர். ஆனாலும் இன்னும் பலநாடுகளில் தீவிரவாதிகளின் முகாம்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்றும் புஷ் கூறினார்.

அமெரிக்க அணு உலைகளைத் தகர்க்க திட்டமிட்ட ஆப்கான் தீவிரவாதிகள்:

இதற்கிடையே அமெரிக்க அணு உலைகளைத் தகர்ப்பதற்கு ஆப்கானிய தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்றுபுஷ் கூறினார்.

அமெரிக்க அணு உலைகளின் வரைபடங்கள் ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புஷ் கூறினார்.

இதற்குப் பிறகு தீவிரவாதிகள் மீதான எங்கள் தாக்குதால் மிகவும் தீவிரமானது என்றும் புஷ் தெரிவித்தார்.

இந்தியா, சீனா, ரஷ்யாவுடன் நல்லுறவு:

இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் தற்போது நல்ல உறவு நிலவி வருவதாக புஷ் கூறினார்.

முன்பு இந்த நாடுகள் எங்களுக்குப் பரம எதிரிகளாகத்தான் இருந்தன. ஆனால் இந்த 3 நாடுகளுடனும் இப்போதுநாங்கள் அமைதி ஏற்பட வேண்டும் என்றே விரும்புகிறோம் என்றும் புஷ் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X