இந்தியாவில் ஊடுருவிய 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 5 பேரை இந்திய ராணுவத்தினர்சுட்டுக் கொன்றனர்.
இத்தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்ட இந்திய ராணுவத்தினர், இவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
உடனடியாக ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தியதில், 5 தீவிரவாதிகளுமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே உதாம்பூர் மாவட்டத்தில் ஒரு இளைஞரைக் கடத்திய சில தீவிரவாதிகள், அவருடைய காதுகளைஅறுத்து விட்டு அவரை கீழே போட்டுவிட்டுப் போய்விட்டனர்.
அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாகஇருப்பதாகக் கூறப்படுகிறது.
2 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இந்நிலையில் கூப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேநடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், 2 ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட அந்தத் தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும்கைப்பற்றப்பட்டன.