For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்கெட் மோசடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டிக்கெட் இருந்தும் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க அனுமதிக்கப்படாத ரசிகர்களுக்கு கட்டணத்தைத் திருப்பித்தரவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 25ம் தேதி இந்தியா-இங்கிலாந்துக்கிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம்ஸ்டேடியத்தில் நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பே இடமில்லாமல் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியைப் பார்க்க டிக்கெட் இருந்தும் ஸ்டேடியத்துக்குள்அனுமதிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து வக்கீல் சந்திரசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்தமனுவில் அவர் கூறியிருப்பதாவது:

அளவுக்கதிகமாக கள்ளத்தனமாக டிக்கெட் விற்பனை செய்ததால்தான், உண்மையாக பணம் கொடுத்து டிக்கெட்வாங்கியவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

அதனால் டிக்கெட் வைத்திருந்தும் போட்டியை பார்க்க அனுமதிக்கப்படாத ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இன்று (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமிஆகியோர் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு இன்னும் 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறுகேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X