ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டிய முஷாரப்
இஸ்லாமாபாத்:
ராணுவத் தளபதிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாகபாகிஸ்தான் அதிபரும் ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரப் மிரட்டிய செய்தி வெளியாகியுள்ளது.
அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் சில பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் ராணுவத் தளபதிகள்முஷாரப்பை வற்புறுத்தினர்.
இதனால் கோபமடைந்த முஷாரப், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டினார். இதையடுத்துராணுவ தளபதிகள் பின்வாங்கி விட்டனர்.
ஆனாலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளதாகக்கூறப்படுகிறது.
காஷ்மீர் பிரச்சனையிலிருந்து அனைத்துப் பிரச்சனைகளிலும் இந்தியாவுடன் மோதல் போக்கைத்தான்கடைப்பிடிக்க வேண்டும் என்று ராணுவ தளபதிகள் விரும்புகின்றனர்.
அதன் அடிப்படையில்தான் முஷாரப் பேச்சின் சில பகுதிகளை நீக்குவதற்கு ராணுவத் தளபதிகள்முயற்சித்துள்ளனர்.
ராணுவத்தினரை சந்திக்கும் முஷாரப்:
இதற்கிடையே இன்று ராவல்பிண்டி செல்லும் முஷாரப், அங்குள்ள ராணுவத்தினரை நேரடியாகச் சந்தித்துஅப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிடவுள்ளார்.
கடந்த வாரம்தான் இதுபோல் எல்லைப் பகுதிக்கு வந்த முஷாரப், அங்குள்ள ராணுவத்தினரைச் சந்தித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
எல்லையிலிருந்து இந்தியப் படைகள் வாபஸ் பெறாத வரை நாங்களும் எங்கள் படைகளை வாபஸ் பெறப்போவதில்லை என்று ஏற்கனவே முஷாரப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.