For Daily Alerts
Just In
பழநி தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது
பழநி:
பழநியில் கடந்த 10 நாட்களாக மிக விமர்சையாக நடந்து வந்த தைப்பூசத் திருவிழா நேற்று தெப்பத் திருவிழாவுடன்நிறைவடைந்தது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மற்றுமின்றி மலேசியா,சிங்கப்பூர், இலங்கையிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கன பக்தர்கள் பல நாட்கள் நடை பயணமாக பழநியில்குவிந்து முருகப் பெருமானின் அருள் பெற்றனர்.
இந்த விழா நேற்று தெப்பத் திருவிழாவுடன் முடிவடைந்தது. வள்ளி, தெய்வானை சகிதமாக வண்ண விழக்குகளால்அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருகப் பெருமான் கோயில் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந் நிகழ்ச்சியையொட்டி பழநியில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
Comments
Story first published: Friday, February 1, 2002, 5:30 [IST]