For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் ஹைகோர்ட் பெஞ்ச் அமைப்பதை எதிர்த்து வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை (பெஞ்ச்) மதுரையில் அமைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்வக்கீல் ஒருவர் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக முன்பு அமைக்கப்பட்ட கமிஷன் ஒன்றும், மதுரையில், கிளையை அமைக்கலாம் என்றுபரிந்துரைத்தது.

இந்தச் சூழ்நலையில் தற்போதுதான் உயர்நீதிமன்றத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கட்டிடம்கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையை அமைப்பது சட்ட விரோதமானதுஎன்று கூறி சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த தர் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில் குமார் கூறியிருப்பதாவது:

1956ம் ஆண்டு மாநில சீரமைப்பு சட்டம் 51-வது விதியின் கீழ் மாநில தலைமையகத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தின்கிளையை வேறு ஒரு இடத்தில் அமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், இங்கிலாந்து அரசின் 1865ம் ஆண்டு உயர்நீதிமன்றச் சிறப்புச் சட்டத்தின் கீழ்உருவாக்கப்பட்டது. எனவே 1956ம் ஆண்டு மாநில சீரமைப்பு சட்டத்தின் 51-வது விதியை இந்த நீதிமன்றம்செயல்படுத்த முடியாது.

எனவே இந்த சட்டத்தின் கீழ் சென்னை உயர்நீதிமன்றக் கிளையை மதுரையில் ஏற்படுத்த முயல்வது சட்டப்படிசெல்லாது, சட்ட விரோதமானதாகும். எனவே இந்த நடவடிக்கையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றுகுமார் மனுவில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X