கடத்தப்பட்ட அமெரிக்க நிருபரின் மனைவி உருக்கம்
கராச்சி:
கடத்தப்பட்ட அமெரிக்க நிருபரான டேனியல் பேர்லை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று அவருடைய மனைவி மரியான் பேர்ல் தீவிரவாதிகளிடம் உருக்கமான வேண்டுகோளைவிடுத்துள்ளார்.
தன்னுடைய கணவரை ஒரு அமெரிக்கராக நினைக்காமல் ஒரு சாதாரண மனிதனாக நினைத்து அவரை விடுவிக்கவேண்டும் என்று கர்ப்பிணியான மரியான் தீவிரவாதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தன்னுடைய கணவர் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் ஒரு நல்ல மனிதர் என்று பாகிஸ்தான் மக்களிடம்மரியான் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
டேனியலை அமெரிக்காவின் உளவாளி என்றோ இஸ்ரேலின் உளவாளி என்றோ கூறுவது தவறு என்றும் மரியான்உறுதியுடன் கூறுகிறார்.
தன்னுடைய கணவரை இழந்து தான் மிகவும் துன்பப்படுவதாகவும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளகடத்தல்காரர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே டேனியலைப் பாகிஸ்தான் போலீசார் வெகு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டேனியலைக் கொன்று அவருடைய உடலை கராச்சியில் உள்ள ஒரு கல்லறையில் வீசியிருப்பதாகத் தீவிரவாதிகள்கொடுத்த தகவலையடுத்து, அங்குள்ள அனைத்துக் கல்லறைகளையும் போலீசார் தேடிப் பார்த்துவிட்டனர்.
ஆனால் அவருடைய உடல் எங்கும் காணப்படவில்லை. இதனால் டேனியல் இன்னும் உயிருடன் இருப்பதாகவேநம்பப்படுகிறது.
இதற்கிடையே டேனியலைப் பணயக் கைதியாக வைத்துள்ளதாகக் கூறி பணம் கேட்ட ஒருவரைப் பாகிஸ்தான்போலீசார் கைது செய்துள்ளனர்.