தபால் நிலையத்தில் பாஸ்போர்ட்: பூங்கா நகரிலும் அறிமுகம்
சென்னை:
சென்னை பூங்காநகர் தலைமை தபால் நிலையத்தில் விரைவு பாஸ்போர்ட் மையம் இன்று தொடங்கப்பட்டது.
சென்னையில் ஏற்கனவே 6 தலைமை தபால் நிலையங்களில் விரைவு பாஸ்போர்ட் மையங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் இன்று பூங்காநகர் தலைமை தபால் நிலையத்தில் இந்த மையம் இன்று திறக்கப்பட்டது.
இந்த விரைவு பாஸ்போர்ட் மையத்தை விரைவுத் தபால் நிலையமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும்இணைந்து தொடங்கியுள்ளன. இந்த வார இறுதிக்குள் சென்னையில் இன்னும் 6 தபால் நிலையங்களில் இந்தமுகாம் தொடங்கப்படுவதாக உள்ளது.
இந்த விழாவில் கலந்துக் கொண்ட தமிழ்நாடு விரைவு தபால் தலைமை இயக்குநர் வத்சலா ரகு நிருபர்களிடம்கூறியதாவது:
இனி பொது மக்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்று பெரிய க்யூவில் நிற்கும் சிரமம் இல்லை.
இங்கேயே பாஸ்போர்ட்டுக்கான அப்ளிகேஷன் வழங்கப்படும். இங்குள்ள ஊழியர்களே இந்த அப்ளிகேஷனைநிரப்ப உதவி செய்வர். பிறகு இந்த அப்ளிகேஷனகள் கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலம் பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிறகு பாஸ்போர்ட் பொது மக்களுக்கு வீடு தேடி விரைவு தபால் மூலம் அனுப்பப்படும். இதற்காக ரூ.100 கட்டணம்அதிகப்படியாக வசூலிக்கப்படும் என்று வத்சலா கூறினார்.