திருத்தணியில் பெரியார் சிலை அகற்றம்: அதிகாரிகள் மீது வைகோ பாய்ச்சல்
சென்னை:
திருத்தணியில் பெரியார் சிலையை அகற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருத்தணியில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை பீடத்தை அராஜக ஆட்சியின் அதிகார வர்க்கத்தினர்இடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் பெரியார் சிலையை அகற்றி சாக்கு மூட்டையில் கட்டி இழுத்துக் கொண்டு போனதை அறிந்து ரத்தம்கொதிக்கிறது.
மாபெரும் தலைவரின் சிலையை அப்புறப்படுத்தி பீடத்தை இடிக்கும் துணிச்சல் அரசு அதிகாரிகளுக்கு எப்படிவந்தது? யார் இந்த துணிச்சலைத் தந்தது?
இந்த கொடுமைக்கு முடிவுக் கட்ட திராவிட இயக்க உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் பொங்கி எழவேண்டும். இந்த இழி செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அவர்களை வேலை நீக்கம் செய்து, வழக்கு தொடர்ந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று வைகோகூறினார்.